அக்டோபர் மாதத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முடிவை அரசு இன்னும் எடுக்க வில்லை என உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வி துறை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் முன்னர் நடைபெற்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், வருகைப்பதிவு அடிப்படையிலும் கணக்கிடப்படும் என்று அவர்களை அரசு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணபித்தவர்களையும் அவ்வாறு தேர்ச்சி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதில் தமிழக அரசு சார்பில் தனித்தேர்வர்களை தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க முடியாது என்றும் அவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று, அதற்கான முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. மேலும் பள்ளிகள் திறப்பு குறித்த நீதிபதி எழுப்பிய கேள்விக்கு அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தனித்தேர்வர்கள் தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்