Published : 23,Aug 2020 06:37 PM
சோனியா காந்தி கட்சியின் தலைவராகத் தொடர வேண்டும் - கே.எஸ்.அழகிரி

சோனியாகாந்தி கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “சோனியாகாந்தி கட்சியின் தலைவராக தொடர வேண்டும். கோடிக்கணக்கான இந்திய மக்களும், காங்கிரஸ் கட்சியின் செயல் மறவர்களும் சோனியா, இராகுலை பின் பற்றுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அன்னை சோனியா காந்தி கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும்.கோடிக்கணக்கான இந்திய மக்களும்,காங்கிரஸ் கட்சியின் செயல் மறவர்களும் சோனியா, இராகுலை பின் பற்றுகிரார்கள்
— KS_Alagiri (@KS_Alagiri) August 23, 2020
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியாகாந்தி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கே.எஸ்.அழகிரி இந்த டிவிட்டை பதிவு செய்துள்ளார்.