பிரிட்டனில் மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி ரூ 2.55 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள பிரிட்டனைச் சேர்ந்த ஈஸ்ட் பிராஸ்டால் ஏல நிறுவனம் "சுமார் 4 வாரங்களுக்கு முன்பு எங்களுடைய கடிதப்பெட்டியில் இந்த மூக்குக்கண்ணாடி காந்தி பயன்படுத்தியது. இதனை காந்தியே என் மாமாவிடமே அளித்ததாக தெரிவித்திருந்தார். இந்தக் மூக்குக் கண்ணாடி காந்தி, தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது பயன்படுத்தியதாக ஏல நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் பேசியுள்ள ஏல நிறுவனம் "இந்த ஏலம் எங்களுக்கு மிகப்பெரிய சாதனையை முதல் முறையாக கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துவிட்டது. காந்தியின் கண்ணாடியை ஏலம் எடுத்தவரின் பெயரை வெளியிட முடியாது. ஆனால் அவர் தென் மேற்கு இங்கிலாந்தின் மங்கோட்ஸ்பீல்டை சேர்ந்த முதியவர். இந்திய மதிப்பில் 2.55 ரூபாய்க்கு கண்ணாடியை ஏலம் எடுத்துள்ளார். அவர் தன் மகளுடன் வந்து ஏலம் எடுத்து மகிழ்ச்சியுடன் சென்றார்".
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு