Published : 17,Aug 2020 06:45 PM
’பி.எம்.கேர் நிவாரண நிதி’யில் நேர்மையற்ற தன்மை – ராகுல்காந்தி சாடல்

பிஎம் கேர் எனப்படும் கோரோனா நிவாரணப்பணிகளுக்கான பிரதமர் நிதியில் நேர்மையற்ற தன்மை உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதம மந்திரி அலுவலகம், PM-CARES நிதி தொடர்பான தகவல் அறியும் கோரிக்கையை மறுத்துள்ளது தொடர்பான பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ நேர்மையற்ற தன்மையின் உரிமைக்காக PM-CARES பிஎம்கேர்” என்று பதிவிட்டுள்ளார்