நாமக்கல் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பொறியியல் பட்டதாரியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் அருகே கூலித் தொழிலாளி ஒருவரின் 7 வயது மகளை அப்பகுதியில் உள்ள இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குழந்தைகள் நல குழுமத்திற்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல குழுவினர், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதேபகுதியைச் சேர்ந்த பொறியல் பட்டதாரி ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை என்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், அந்தச் சிறுமியை மருத்துவ சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!