Published : 27,Jun 2017 04:48 AM

விட்டு சென்ற கணவன்: விடாப்பிடியான தர்ணாவில் காதல் மனைவி

Wife-does-dharna-for-husband


காதலித்து திருமணம் செய்து கைவிட்டதால் கணவன் வீட்டு முன் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாய் பொட்டல் நகரை சேர்ந்தவர் விக்டோரியா. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த, பிரிட்டோ என்பவரும் காதலித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொணடனர். இதனை பிரிட்டோ குடும்பத்தார்கள் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரிட்டோ, மனைவி விக்டோரியாவை விட்டு விலகி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விக்டோரியா, பிரிட்டோ வீடு முன் தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்