தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ராதிகா. இவர் சினிமாத்துறையில் 42 வருடத்தை பூர்த்தி செய்துள்ளார். தற்போது சின்னத்திரையிலும் நடித்து வரும் ராதிகா, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் மூலம் சினிமாத்துறைக்குள் கால்பதித்தார். பாஞ்சாலி என்ற கதாபாத்திரத்தை சுற்றி நகரும் அப்படத்திலேயே, அதிக கவனம் பெற்றார் ராதிகா.
1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10 தேதி தன்னுடைய காலடியை பதிவு செய்த ராதிகா, தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். இன்றோடு 42 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் பலரும் ராதிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா, நான் இவ்வளவு தூரம் பயணித்து வருவென் என நினைத்து பார்க்கவில்லை.
ஒவ்வொரு நாளையும் சவாலாக எடுத்துக்கொண்டு என்னுடைய சிறந்த உழைப்பைக் கொடுத்தேன். அது தான் இவ்வளவு தூரம் கடந்து வருவதற்கு காரணம். இது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், தைரியத்தையும் அளித்துள்ளது. அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார். சின்னத்திரையிலும் நடித்து வரும் ராதிகா, வானம் கொட்டட்டும் படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். அவர் நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படம் தயார் நிலையில் இருக்கிறது. இன்னும் சில படங்களிலும் ராதிகா நடித்து வருகிறார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!