நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிஎஸ் கர்ணன் தமக்கு ஜாமீன் அல்லது பரோல் வழங்கப்பட வேண்டுமென மேற்கு வங்க ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில் கைது செய்யப்பட்ட கர்ணன், கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தமக்கு அளிக்கப்பட்ட தண்டனையில் குறைபாடுகள் இருப்பதாகக் தெரிவித்துள்ள கர்ணன், குறைபாடுகள் களையப்படும் வரை தமக்கு ஜாமீன் அல்லது பரோல் அளிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக, ஆளுநருக்கு தமது வழக்கறிஞர் மூலம் அனுப்பியுள்ள மனுவில், ஆளுநர் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக கர்ணன் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மனுக்களின் பிரதிகள் மேற்கு வங்க முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கர்ணனின் வழக்கறிஞர் கூறினார்.
முன்னதாக, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ்.கர்ணனுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மே 9-ம் தேதி 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து தலைமறைவான கர்ணன், தலைமறைவு காலத்திலேயே பணி ஓய்வு பெற்றார். அவரை மேற்கு வங்க போலீஸார் கடந்த 20-ம் தேதி கோவை அருகே கைது செய்தனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்