Published : 08,Aug 2020 06:21 PM
குண்டுவெடிப்பில் காயமடைந்த புறாவிற்கு தண்ணீர் கொடுத்த மனிதர் - வைரல் வீடியோ

தி நியூயார்க் டைம்ஸின் மத்திய கிழக்கு நிருபராக பணிபுரியும் பத்திரிகையாளர் விவியன் யீ என்பவர், லெபனான் குண்டுவெடிப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குண்டுவெடிப்பிற்கு பிறகு ஒருவர் காயமடைந்த புறாவிற்கு பாட்டில் மூடியில் தண்ணீர் ஊற்றிக் கொடுப்பதைக் கண்டுள்ளார்.
அந்த நபரின் பெயர் அப்தெல் சலாம் என்றும், அவர் சீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டு மனிதனின் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
Just went back to my shattered Beirut neighborhood for the first time since the explosion. One of the first people I saw was this Syrian man, Abdel Salam, who was ever-so-gently pouring water into a bottle cap for this one-eyed injured pigeon to drink. pic.twitter.com/JUFJj6nEJC
— Vivian Yee (@VivianHYee) August 6, 2020
கடந்த ஆண்டு ஹாங்காங்கில் கண்ணீர்ப்புகையால் பாதிக்கப்பட்ட ஒரு புறாவிற்கு உதவிய வீடியோவை இது நினைப்பூட்டியதாக பலர் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற சிலரின் மனிதாபிமானம் மிக்க செயல்களால்தான் இன்னும் உயிரோடு இருக்கமுடிகிறது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.