கோவையில் தொடரும் ட்ரவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம்... ஒரே நாளில் 4 இடத்தில் கொள்ளை முயற்சி

கோவையில் தொடரும் ட்ரவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம்... ஒரே நாளில் 4 இடத்தில் கொள்ளை முயற்சி
கோவையில் தொடரும் ட்ரவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம்... ஒரே நாளில் 4 இடத்தில் கொள்ளை முயற்சி

கோவையில் தொடரும் ட்ரவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம் ஒரே நாளில் 4 இடத்தில் கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன.

சமீப காலமாக கோவையில் அரைகால் டவுசருடன் மேலாடையின்றி ஒரு கும்பல் சுற்றும் வீடியோ கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்கும்பல் கோவை இருகூர் யு.பு. புதூர் அருகே புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் மதில் சுவர் மேல் ஏறி உள்ளே குதித்துள்ளனர் அப்போது பொதுமக்கள் அருகில் இருக்கும் சத்தம் கேட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

 பின்பு சிங்காநல்லூர் பகுதியில் கோத்தாரி நகரில் ஒருவர் வீட்டில் கதவை உடைக்க முயன்றபோது பொதுமக்கள் சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பி ஓடி மீண்டும் சிங்காநல்லூர் கதிரவன் கார்டன் பகுதியிலுள்ள ஒருவரது வீட்டில் ஆட்கள் இருந்த போதே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வர முயன்றபோது சத்தம் போட்டதால் பயந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.


பின்பு மீண்டும் கொள்ளையடிக்க முற்பட்டு அங்குள்ள சுருதி என்கிளேவ் அருகே உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முற்பட்டனர். வீட்டில் ஏதோ சத்தம் கேட்கவே வீட்டில் இருந்தவர்கள் சத்தம்போட்டு பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்தனர் இதனால் பயந்த கொள்ளையர்கள் விட்டனர்,

இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர் இச்சம்பவம் குறித்த சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் இதுவரை போலீஸ் கையில் சிக்காத இந்த நூதன கொள்ளைக் கும்பல் குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com