இந்தியாவில் 1975ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியின் வழிகாட்டுதலின் படி, குடியரசுத்தலைவராக இருந்த பக்ருதின் அலி அகமதுவால் அரசியலமைப்புச் சட்ட விதி352-ன் படி நெருக்கடி நிலை நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டது. எமர்ஜென்சி கொண்டுவரப்பட்ட சில நாட்களில், இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியால் மும்பையில் நடத்தப்பட்ட காங்கிரஸ் பேரணியில், அந்நாளின் மிகப் பிரபலமான பாடகர் கிஷோர் குமாரைப் பாடச்சொல்லி கேட்டார்கள் பேரணி ஒருங்கிணைப்பாளர்கள். கிஷோர் குமார் பாட மறுத்துவிட்டார். அதன்பின், அப்போதைய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்த விசி ஷுக்லா, அகில இந்திய வானொலியிலும், தூர்தர்ஷன் ஒளிபரப்பிலும், கிஷோர் குமாரின் பாடல்களை ஒளிபரப்பக்கூடாது என்னும் அதிகாரப்பூர்வமற்ற, ஆனால் வாய் வழி உத்தரவாக தடை பிறப்பித்திருந்தார்.
நெருக்கடி நிலையானது 1975 ஜூன் 25ம் தேதி முதல் 1977 மார்ச் 23 வரை சுமார் 21 மாதங்கள் நீடித்தது. இந்தக் கால கட்டத்தில் அரச ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. போர் நிகழும் சூழலில் அல்லது போர் நிகழும் போது மட்டும் அமல்படுத்தப்பட வேண்டிய நெருக்கடி நிலை, இந்திரா காந்தியின் நலனைக் காக்கவும், ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் கொண்டுவரப்பட்டது. அந்த இக்கட்டான நேரத்தில், மக்கள் விரும்பி ரசித்த கிஷோர்குமாரின் பாடல்கள், எமர்ஜென்சி முடிவுக்கு வரும் வரை (23 மார்ச் 1977) ஒளிபரப்பப்படவில்லை.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்