சேலத்தில் பனை மரம் ஏறும் தொழில் செய்த தொழிலாளி மரத்தின்மீது இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரியாம்பட்டி கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பனைத் தொழில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுள் ஒருவரான மாரியம்மன் (65) வயது முதிர்வு ஏற்பட்டும் பனை தொழில் செய்துவருகிறார். இவர் சுமார் 50 ஆண்டுகளாக பனை தொழில் மட்டும் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கியும், பனை கருப்பட்டி செய்தும், பனை நுங்கு வெட்டியும் விற்பனை செய்தார்.
இந்நிலையில் மாரியப்பன், துட்டம்பட்டி கிராமத்திற்கு பனை மரம் ஏறச் சென்றார். பனை மரத்தில் பாதுகாப்பு வளையத்தை மாட்டிகொண்டு ஏறிய அவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மரத்தின் மேலே இருந்து சரிந்துகொண்டே கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, அவர் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார், பனை தொழிலாளி மாரியப்பனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்