கொரோனாவிலிருந்து மீண்ட 103 வயது முதியவர்..!

கொரோனாவிலிருந்து மீண்ட 103 வயது முதியவர்..!
கொரோனாவிலிருந்து மீண்ட 103 வயது முதியவர்..!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 103 வயது முதியவர் வீடு திரும்பினார்

திண்டுக்கல்லில் கொரோனா நோய்தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில் இதுவரை இல்லாத அளவாக நேற்றுமட்டும் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுவரை திண்டுக்கல்லில் கொரோனா மொத்தபாதிப்பு 2318 ஆக உள்ளது. இதில் 1683 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 103 வயது முதியவர் சரவணன் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அவரை இணைஇயக்குனர் சரவணன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வழியனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com