கொரோனோவால் பாதித்துள்ள விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட கிசான் கிரெடிட் கார்டு திட்டம் வெற்று அறிவிப்பாக மட்டுமே உள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
கொரோனோ சிறப்பு தொகுப்பு திட்டம் மூலமாக இருபது லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்த மத்திய அரசு, இரண்டு லட்சம் கோடியை வேளாண் துறைக்கு ஒதுக்கியது. இந்த நிதியின் மூலமாக 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கிசான் கிரெடிட் கார்டுகள் மூலமாக விவசாயிகள் 3 லட்சம் வரை கடன்பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதற்கான வட்டிவிகிதம் 4 சதவீதம் மட்டுமே என்றும் அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்புகள் வெறும் அறிவிப்பாகவே மட்டுமே உள்ளது என்றும், எந்த விவசாயியும் இதனால் பயன் பெறவில்லை என்றும் குமுறுகின்றனர் உழவர்கள்.
“தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதலே கிசான் கிரெடிட் கார்டுகள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவ்வப்போது அறிவிப்புகள் மட்டும் வெளியிட்டு கொண்டிருக்கிறார். ஆனால் விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று கிசான் கிரெடிட் கார்டுகள் பற்றி கேட்டால் அதுபற்றி தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பல ஊர்களில் உள்ள வேளாண் அலுவலர்கள், கால்நடை அலுவலர்கள் போன்றோருக்கும் இதுபற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகங்கள் இந்த கடன் அட்டை திட்டத்தால் பயனடைந்த விவசாயிகளின் பட்டியலை வெளியிட வேண்டும். கொரோனோவால் சிக்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை ஒரு ரூபாய்கூட உதவி செய்யவில்லை. ஆனால் பல லட்சம் கோடிகளுக்கு திட்டங்களை மட்டும் அறிவிக்கின்றனர். எனவே உடனடியாக விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார் விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் ஜீவக்குமார்.
Loading More post
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!