திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் குளங்களில் குப்பை கொட்டப்படுவதால் கடும் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியும் ஒன்று. இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குங்கும் பாண்டி கோயில் குளம் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் குளங்களில் அதிகமான மழைநீரை சேமிக்க குடிமராமத்து பணியின் மூலம் பல லட்சம் செலவுசெய்து குளங்களை தூர்வாரி கரைகளை உயர்த்தியுள்ளனர்.
ஆனால் பொதுமக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத ஊராட்சி நிர்வாகம் வறண்டு கிடந்த குளத்தில் இருந்த மழை நீர் சேகரிப்பு குழிகளில் பாலகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி வைத்துள்ளது.
மலை போல் குவிந்துள்ள குப்பைகளை தரம் பிரிக்காமல் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நாஃப்கின் போன்றவைகளை அங்கேயே வைத்து எரிக்கப்படுவதால் குளத்தின் அருகிலுள்ள விவசாயிகளுக்கும் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கும் நோய் தொற்றும், மூச்சுத்திணறலும் ஏற்படுவதாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுபற்றி ஊராட்சிமன்ற தலைவரிடம் கேட்டதற்கு இனிமேல் குளங்களில் குப்பையை கொட்டமாட்டோம். குப்பையை கொட்டுவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!