தஞ்சை மக்கள் திருமணம் குறித்த பேச்சு : நடிகை வனிதா மீது காங். பாஜக நிர்வாகிகள் புகார்

தஞ்சை மக்கள் திருமணம் குறித்த பேச்சு : நடிகை வனிதா மீது காங். பாஜக நிர்வாகிகள் புகார்
தஞ்சை மக்கள் திருமணம் குறித்த பேச்சு : நடிகை வனிதா மீது காங். பாஜக நிர்வாகிகள் புகார்

நடிகை வனிதா மீது தஞ்சை மக்கள் இரண்டு திருமணம் செய்துகொள்வார்கள் என சர்ச்சையாக பேசிய விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரைப்பட நடிகை வனிதா, தஞ்சை மாவட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் இரண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வனிதாவின் ஆடியோ தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வனிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதேபோல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினரும் புகார் மனு அளித்தனர். புகாரில் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி வரும் தஞ்சை மக்களின் மனதை புண்படுத்திய வனிதா விஜயகுமார் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர் தெரிவித்த கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் கூறப்பட்டுள்ளது.

இல்லையென்றால் தமிழக அளவில் கடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், எனவே வனிதா மீது வழக்குப்பதிவு செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com