இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை வரும் ஜூலை 9ம் தேதி வரை நீட்டிப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பதவிக்காக முன்னரே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் coachappointment@bcci.tv என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விபரங்களை அனுப்பி வைக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் கடந்த மே 31ம் தேதியுடன் முடிவடைந்தது. டாம் மூடி, வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். அனில் கும்ப்ளே பதவி விலகலைத் தொடர்ந்து, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தினை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்