பி.எஸ்.எல்.வி-சி 38 ராக்கெட்டில் அனுப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன என இஸ்ரோ அமைப்பு தெரிவித்துள்ளது.
பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சரியாக காலை 9 மணி 29 நிமிடங்களுக்கு ராக்கெட் ஏவப்பட்டது. இயற்கை வளங்களை துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் திறன் வாய்ந்த 712 கிலோ எடை கொண்ட கார்ட்டோசாட்-2 இ செயற்கைகோள், இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. மேலும் 30 நானோ செயற்கைகோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில், 29 செயற்கைகோள்கள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தவை. ஒரு செயற்கைகோள், கன்னியாகுமரியைச் சேர்ந்த நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியது. இந்த செயற்கைகோள் பயிர் கண்காணிப்பு மற்றும் பேரிடர் காலங்களில் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கார்ட்டோசாட் வகை செயற்கைக்கோள்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுபவை ஆகும். கார்ட்டோசாட் 2-இ செயற்கைக்கோள் மூலம் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக்கூட மூலம் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!