இந்தியா: 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 587 பேர் பலி

இந்தியா: 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 587 பேர் பலி
இந்தியா: 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 587 பேர் பலி

இந்தியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 587 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 11,18,043 லிருந்து 11,55,191 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,497 லிருந்து 28084 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 587 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 37,148 ஆக உள்ளது. கொரோனா பாதித்த 4,02,529 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் குணமடந்தவர்களின் எண்ணிக்கை 7,00,087 லிருந்து 7,24,576 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 3,18,695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12,030 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 1,75,029 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 1,75,678 பேரும், டெல்லியில் 1,23,747 பேரும், குஜராத்தில் 49,353 பேரும் உத்திரபிரதேசத்தில் 51,160 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com