பேய் ஆணையிட்டதாக கூறி தந்தையே மகளின் காதுகளை வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் ஜிடிபி நகர் பகுதியில் வசித்து வருபவர் அம்ரித் பஹதூர். இவருக்கு 2 பெண்கள் குழந்தைகள். அதில், ஒரு குழந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதால் குடிப்பழகத்திற்கு ஆளாகிய அம்ரித், சற்று மனநலம் சரியில்லாதவர் போல் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர், தனது 3 வயது பெண் குழந்தையின் காதை வெட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அம்ரித்தை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பேய் ஒன்று தன்னிடம் கூறியதால், குழந்தையின் காதை வெட்டியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இதனை தான் செய்யாவிட்டால் குழந்தை இறந்துவிடும் என பேய் சொன்னதாகவும், இதன் காரணமாகவே இந்த கொடூரச் செயலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்