மஹாராஷ்டிராவில் விவசாயக் கடன் தள்ளுபடிக்காக சிவசேனா கட்சி நிர்வாகிகள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தைக் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி அம்மாநில விவசாயிகள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். எனவே, எதிர்க்கட்சியான சிவசேனா கட்சி நிர்வாகிகள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை கொடுத்து உதவுவதாக அறிவித்துள்ளனர். சிவசேனாவைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள், 63 எம்.எல்.ஏ.க்கள், கார்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், மாவட்டச் செயலாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி, கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் என பல மட்டத்தில் உள்ளவர்களும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கொடுப்பார்கள். அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ரூ.10 லட்சம் கொடுப்பார் என்று மூத்த தலைவர் திவாகர் ராவோட் தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே, தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களிடம் பணம் வசூல் செய்து ரூ.4.5 கோடியை விவசாயிகளுக்காக கொடுத்துள்ளார்.
இந்தியாவிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெறும் மாநிலம் மஹாராஷ்டிரா என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!