பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், அது குறித்து போலீசிடம் புகார் கொடுக்க வந்தபோது போலீசாரும் அவருடன் உடலுறவில் ஈடுபடுமாறு நிர்பந்தித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்தவர் தாரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த பிப்ரவரி மாதம், உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் இரண்டு பேர் லிப்ட் கொடுத்துள்ளனர். அப்போது தாராவின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த இரண்டு பேரும், தாராவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதுதொடர்பாக போலீசில் தாரா புகார் அளித்தும் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்ய மறுத்திருக்கின்றனர். பின்னர் தாரா இதுதொடர்பாக உள்ளூர் நீதிமன்றத்தை நாட, இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தாராவை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரும் தற்போது மீண்டும் அவரை சுற்றி சுற்றி வரவே பயந்து போன தாரா இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்க ராம்பூரில் உள்ள கஞ்ச் போலீஸ் நிலையத்தை நாடியிருக்கிறார். தனக்கு பாலியல் கொடுமை செய்த இரண்டு பேரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அங்கிருந்த விசாரணை அதிகாரியோ, தாராவிடம் " முதலில் என் விருப்பத்தை நிறைவேற்று.. அப்புறம் உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்" என்றிருக்கிறார். மேலும் நான் தனியாக இருக்கும் போது எங்கள் வீட்டுக்கு வா என்றும் அழைத்திருக்கிறார். இதனால் மீண்டும் சோர்ந்து போன தாரா, வீட்டிற்கே திரும்பிவிட்டார். பின்னர், மறுமுறையும் அந்த போலீசாரிடம் உதவிக்கு நாடிய போது, அவர் பேசியதை ஆடியோவில் சாமர்த்தியமாக பதிவு செய்துவிட்டார் தாரா. இதுதொடர்பாக தேவையான ஆடியோ ஆதாரத்துடன், எஸ்.பி.யிடம் தாரா முறையிட இதுகுறித்து விசாரணை நடத்த எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!