ஹைதராபாத்தில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையிலிருந்து காணாமல்போன நபர் பிணவறையில் அடையாளம் காணப்பட்டார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் நரேந்தர் சிங். இவருக்குக் கடந்த மே மாதம் மூச்சுவிடுவதில் சிரமம், சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டது. இதையடுத்து அவர் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு பின்னர் மே 30ஆம் தேதியன்று காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து 31ஆம் தேதியன்று அவரைக் காணவில்லை. நரேந்தர் சிங்கை எங்கு தேடியும் கிடைக்காததால் அவரைக் காணவில்லை எனக் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மருத்துவமனை நிர்வாகம் உண்மைகளை மறைப்பதாக நரேந்தர் சிங் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் 21 நாட்களுக்குப் பின்னர் காந்தி மருத்துவமனையின் பிணவறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நரேந்தர் சிங் உடல் கண்டறியப்பட்டது. அவரது உடலை குடும்பத்தினர் அடையாளம் காட்டினர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!