குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிப்பதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதன்மூலம் பாஜகவின் வேட்பாளர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்தவித சிரமும் இருக்காது என்று கூறிய அவர், ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும்படி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தன்னிடம் கோரியதாகவும் தெரிவித்தார். தலித் வாக்குகளைக் கவரவே குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உத்தவ் தாக்கரே நேற்று கருத்து தெரிவித்திருந்தார். மகராஷ்டிர மாநிலத்தில் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு குறித்து பல்வேறு கணிப்புகள் வெளியான நிலையில், பாஜக ஆதரவு நிலைப்பாட்டினை சிவசேனா எடுத்துள்ளது.
Loading More post
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!