தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும் ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,071 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 37,070 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 49 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக இதுவரை 625 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா தொற்றின் வேகம் மிகத் தீவிரமாக சென்னையில் பரவி வருகிறது. அதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. நோயின் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கே சரியான தீர்வு என மருத்துவர் வல்லுநர்கள் பரிந்துரைத்ததன் பேரில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு கொரோனாவை குறைக்காது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை போதிய அளவில் மேற்கொள்ளாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து அவர், “கொரோனா பரிசோதனை விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும். அதே போல் பரிசோதனை பட்டியலை நாள்தோறும் வெளியிடுவதில் என்ன சங்கடம் உள்ளது?
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அமலாகும் ஊரடங்கு கொரோனாவைக் குறைக்காது. மேலும் கொரோனா பரிசோதனை சீரான முறையில் இல்லாததால் கடும் சவாலை தமிழகம் எதிர்கொண்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் கொரோனா பாசிடிவ் விகிதம் 10 சதவிகிதத்தை கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்பட்ட பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது” என்று அவர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?