ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்று வருவதால், திமுக சார்பில் மத்திய பாஜக அரசின் நீட் தேர்வை எதிர்த்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய பா.ஜ.க. அரசின் “நீட்” நுழைவுத் தேர்வு மற்றும் “புதிய கல்விக் கொள்கை”யை கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் 20ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டு” நடத்தக் கோரி மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதிலும் உணர்ச்சி மிகு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பீறிட்டு வெளிவரும் தமிழுணர்வை போற்றி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக ரீதியிலான வரலாறு காணாத போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 20ம் தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது எனவும் போராட்டத்திற்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி