மாஸ்க் போட மறந்து போன காவல்துறை அதிகாரி தனக்கு தானே அபராதம் விதித்துக்கொண்டார்
கான்பூர் ஆய்வாளர் மோஹித் அகர்வால் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கொரோனா தொடர்பான ஆய்வுக்குச் சென்ற அதிகாரி மோஹத் அவசரமாக வாகனத்திலிருந்து இறங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தான் மாஸ்க் அணியவில்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
உடனே தனது வாகனத்தில் இருக்கும் மாஸ்கை எடுத்துவரக்கூறி முகத்தில் மாட்டிக் கொண்டார். ஆனாலும் தான் செய்த தவறுக்காக ரூ.100 அபராதம் கட்டினார். அதற்கான ரசீதை அவரே நிரப்பிக்கொண்டார். மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வரும் வேளையில் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நடந்து கொண்ட காவல் அதிகாரியைப் பலரும் பாராட்டி உள்ளனர்.
இது குறித்துத் தெரிவித்துள்ள காவல் அதிகாரி மோஹித் அகர்வால், நான் மாஸ்க் அணியாததை உணர்ந்தவுடன் எனக்கு நானே சட்டப்படி அபராதம் விதித்துக் கொண்டேன். இது மக்களுக்கும், காவல்துறைக்கும் முன்னுதாரணமாக இருக்குமென நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
“கொரோனாவை 20 நிமிடங்களில் கண்டறியும் கிட்” - ஹைதராபாத் ஐஐடி கண்டுபிடிப்பு
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!