மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்: முதியவர் கைது

மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்: முதியவர் கைது
மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்: முதியவர் கைது

மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை சத்தியசாய் நகர், ரோஜா தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 66). இவரது அருகாமையில் உள்ள வீட்டில் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவி விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற ரங்கசாமி சாக்லேட் தருவதாக கூறி அந்த மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்குள் குழந்தையை கொண்டு சென்ற ரங்கசாமி குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வலியில் அலறிக் கொண்டு வீட்டுக்கு வந்த குழந்தை, தாயிடம் நடந்த விஷயங்களை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com