காதலை கைவிட மறுத்த 16 வயது சிறுவனை, நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
டெல்லி அருகிலுள்ள கஞ்சவாலா பகுதியை சேர்ந்தவர் ஜடின். வயது 16. விளையாட்டில் ஆர்வம் உள்ள இவர், 11-ம் வகுப்பு படிக்கிறார். தினமும் மாலையில் ஜாக்கிங் செல்வது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை ஜாக்கிங் செல்லும்போது, அவருக்கு தெரிந்த நான்கு நண்பர்கள், ‘வாயேன், உங்கிட்ட கொஞ்சம் பேசணும்’ என்று அழைத்தனர். போனார் ஜடின். அங்கிருந்த பாழடைந்த பங்களாவுக்குச் சென்றதும் மூன்று பேர் ஜடினை ஒரு சேரில் கட்டி வைத்தனர். வாயை டேப்பால் ஒட்டினர். பின்னர், ‘என் தங்கச்சியை லவ் பண்ணாதேன்னு சொன்னா, கேட்க மாட்டியா?’ என்று கேட்டுவிட்டு ஜடினின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினர். ரத்தம் சொட்ட சொட்ட துடிதுடித்து அங்கேயே இறந்தார் ஜடின்.
பின்னர் இந்த சம்பவத்தை ஒரு நண்பரிடம் சொல்லி, தப்பிக்க என்ன செய்யலாம் என்று கேட்டனர். அவர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மகன். தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு தனது அப்பாவிடம் இந்த சம்பவத்தைச் சொன்னார். அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக அந்த பாழடைந்த பங்களாவுக்கு சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பலியாகி இருந்த ஜடினின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்