மதுரையில் பொது முடக்கத்தில் ஏழைகளுக்கு உதவியதற்காகப் பிரதமரிடம் பாராட்டைப் பெற்ற சலூன் கடை உரிமையாளர் மோகன் தான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. ஆனால் மோடியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்றைய ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசும்போது மக்களின் அர்ப்பணிப்பு குறித்தும் பேசினார். அப்போது மதுரை மேலமடையைச் சேர்ந்த மோகன் என்ற முடிதிருத்தும் தொழில் செய்துவரும், சலூன் கடை உரிமையாளர் தனது மகளின் கல்வி செலவிற்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு ஊரடங்கு நேரத்தில் ஏழைகளுக்கு உதவியுள்ளதாகவும், எனவே தான் அதற்குப் பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இவர் பாஜகவில் இணைந்ததாகவும், பாஜகவினர் பொன்னாடை போர்த்தி அவரை பாராட்டும் புகைப்படங்களும் வெளியாகின. இதுதொடர்பாக உண்மைத் தன்மையை அறிய சலூன் கடை உரிமையாளர் மோகனிடம் புதிய தலைமுறை சார்பில் பேசினோம். அப்போது பாஜகவில் இணைந்துவிட்டீர்களா ? என்ற கேள்விக்குத் தான் எந்தக் கட்சியிலும் இணையவில்லை என்று தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடியைப் பிடிக்கும் என்றார். அத்துடன் கட்சியில் இணைவது குறித்து தன்னால் இப்போது கூற முடியாது எனவும், இன்னும் ஒரு வாரத்திற்குப் பின்னர் தெரிவிப்பதாகவும் கூறினார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!