மத்தியப் பிரதேசத்தில் போதையில் இருந்ததாக ஒருவரை கொடூரமாக தாக்கிய 2 போலீஸார் பணியிடை நீக்கம்செய்யப்பட்டனர்.
மத்தியப் பிரதேசத்தின் சிந்துவாரா காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் தலைமைக் காவலர் கிருஷ்ணா திங்ரே மற்றும் காவலர் ஆஷிஷ் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அங்கே இருந்த நபர் ஒருவரை போதையில் இருந்ததாக இருவரும் லத்தியால் கொடூரமாக தாக்கினர். அவர்கள் தாக்கியதை வீடியோவாக பதிவு செய்த சிலர், அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ வைரலாகியது.
இதையடுத்து அந்தக் காவலர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். அத்துடன், இந்தச் சம்பவத்திற்குப் பலரும் தங்கள் கண்டனங்களையும் வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்திய இருவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று இரண்டு காவலர்களும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தாக்குதலுக்கு ஆளான நபர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதாகவும், தற்போது அந்த நபருக்கு பெரிய காயங்கள் எதுவும் இல்லை எனவும் சிந்துவாரா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் விவேக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!