கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 10 வகுப்புத் தேர்வு எப்படி நடப்படும்? - நீதிமன்றம்

கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 10 வகுப்புத் தேர்வு எப்படி நடப்படும்? - நீதிமன்றம்
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 10 வகுப்புத் தேர்வு எப்படி நடப்படும்? - நீதிமன்றம்
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 10ஆம் வகுப்புத் தேர்வு எப்படி நடத்துவீர்கள் என்று பள்ளிக்கல்வித்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குத் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூன் 15 தேர்வை ஜூலைக்கு மாற்றக்கோரி இந்திய மாணவர் சங்கம் மாரியப்பன், பெற்றோர் ஷேக் அப்துல்லா ஆகியோர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு இன்று விசாரணைக்கு நடத்தியது. அப்போது சென்னையில் தொற்று பரவல் அதிகமாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எப்படித் தேர்வு மையங்களை அமைத்துத் தேர்வு நடத்தப் போகிறீர்கள், வெளியிலிருந்து எப்படி வர முடியும் என  நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
 
 
அதற்கு கொரோனோ கட்டுப்பாட்டுப்  பகுதிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து  விரிவான விளக்கத்தை ஜூன் 11 தாக்கல் செய்ய நீதிபதிகள்  உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com