திருமணமான 7 நாட்களில் மனைவி 8 மாத கர்ப்பம் என்றதால் வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.
கர்நாடக மாநிலம் நாகமங்கலா தாலுகாவில் உள்ள பீமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் உஷா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 19. இவருக்கும் தோடா கருடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. அதன்படி கடந்த 8-ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப் பிறகு உஷாவின் நடவடிக்கைகளில் வெங்கடேஷ் வீட்டில் சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே அவர் தனக்கு வயிறு வலிப்பதாகக் கூற, மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள், உஷா கர்ப்பமாக இருக்கிறார் என்றும் இது 8-வது மாதம் என்று கூறினர். இதைக் கேட்டு வெங்கடேஷூம் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தங்களை ஏமாற்றிவிட்டதாக போலீசில் வெங்கடேஷ் புகார் தெரிவித்தார்.
விசாரணையில் உண்மையை சொல்லத் தொடங்கினார் உஷா. அவரது ஊரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரை காதலித்து வந்தார் உஷா. திருமணம் செய்துகொள்வதாக சந்திரசேகர் உறுதி கூறியதை அடுத்து நெருங்கிப் பழகினார். ஒரு கட்டத்தில் உஷாவுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும் திருமணம் செய்துகொள்ளும்படியும் சந்திரசேகரை வற்புறுத்தி வந்தார். இந்த நேரத்தில்தான் வீட்டில் உஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அதற்கு உஷா ஓகே சொல்ல, திருமணம் நடந்திருக்கிறது. இப்போது சந்திரசேகர் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார் உஷா. அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!