பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 17ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய பொருளாதாரம் மற்றும் மக்களின் வருமானத்திற்காக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணோளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு மேலும் சில அறிவிப்புகள் வெளியிடப்படலாம் எனப்படுகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் வருமானம் தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்யப்படும் எனத் தெரிகிறது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி