சீர்காழி அருகே சாகுபடி செய்யப்பட்டுள்ள 1000 ஏக்கர் முந்திரியை வாங்க ஆளில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலோர பகுதிகளான திருமுல்லைவாசல், வேட்டங்குடி, எடமணல், தொடுவாய், கூழையார், ஓலகொட்டாயமேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுனாமிக்கு பிறகு கடலோர நிலப்பகுதி உப்பு நீராக மாறியதால் இப்பகுதி விவசாயிகள் மாற்று பயிராக வறட்சியை தாங்கி வளரும் முந்திரி சாகுபடியை செய்து வருகின்றனர்.
திருமழிசை தற்காலிக சந்தையில் காய்கறிகள் விலை குறைவு
தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் ஏப்ரல் ,மே மாதங்களில் முந்திரி பழங்கள் விற்பனை செய்யபடுவது வழக்கம். இதனால் நாள்தோறும் விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வந்தது. ஊரடங்கு உத்தரவால் முந்திரி பழம் விற்பனையும் பாதிக்கப்பட்டு பழங்கள் மரங்களிலேயே காய்ந்தும் வயல்களில் கொட்டியும் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கு: திருப்பதி கோயிலில் 400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு !!
அதேபோல் கடந்த ஆண்டு 80 கிலோ முந்திரி 12 ஆயிரம் ரூபாய்கு விற்பனை ஆன நிலையில் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் தற்போது 8 ஆயிரம் ரூபாய்கு மட்டுமே விற்பனையாவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என முந்திரி சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்