தமிழகத்தில் கொரோனா பாதிப்பைப் பொறுத்து 34 கடைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் குறிப்பிட்ட தளர்வுகளுடன் அமலில் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 34 கடைகளை மட்டுமே திறக்க அனுமதி எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ஊரகப் பகுதிகளில் குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக்கடைகள், சிறிய ஜவுளிக்கடைகளைத் திறக்கலாம். செல்போன் விற்கும், பழுது நீக்கும் கடைகள், டிவி விற்பனை, பழுது நீக்கும் கடைகளைத் திறக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இருசக்கர வாகனம், கார் பழுது நீக்கும் கடைகள், நாட்டு மருந்து விற்பனை கடைகளைத் திறக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. டைல்ஸ், பெயிண்ட், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் உதிரிப்பாக விற்பனை கடைகள் இயங்கலாம் எனப்பட்டுள்ளது. மரக்கடைகள், பிளைவுட் கடைகள், மரம் அறுக்கும் கடைகளும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய இடுபொருட்கள், பூச்சி மருந்து விற்பனை கடைகள், பர்னிச்சர் கடைகள் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சலூன்கள், ஸ்பா, அழகு நிலையங்களுக்கு அனுமதி இல்லை எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!