மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக கருப்புச் சின்னம் அணியுமாறு திமுக கூட்டணி அழைப்பு

மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக கருப்புச் சின்னம் அணியுமாறு திமுக கூட்டணி அழைப்பு
மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக கருப்புச் சின்னம் அணியுமாறு திமுக கூட்டணி அழைப்பு

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதைக் கண்டித்து, மக்கள் அனைவரும் கருப்புச் சின்னம் அணியுமாறு திமுக தலைமையிலான கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் ‌மற்றும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்கும் ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமலும்‌, வாழ்வாதாரம் பாதிக்கப்ப‌ட்டோருக்கு நிவாரணம் அளிக்காமலும் அக்கறையின்றி செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் அரசைக் கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌மதுக்கடைகள் திறக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையிலும், மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததைக் கண்டித்தும், மக்கள் அனைவரும் நாளை கருப்புச் சின்னம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் 5 பேருக்கு அதிகமாகாமல் நின்று அதிமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்புமாறும் திமுக கூட்டணி சார்பில் கோரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com