தமிழ்நாடு கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விளையாட உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் இல்லாத குறையை போக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் டிஎன்பிஎல் தொடரை கடந்த ஆண்டு ஆரம்பித்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ஆண்டு இந்தப் போட்டி ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, கிராமப்புற வீரர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளது. இதில் விளையாடிய நடராஜன் உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வருட போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்த சுரேஷ் ரெய்னா , யூசுப் பதான், பியூஸ் சாவ்லா, சாஹல் உட்பட சில வீரர்கள் விளையாடுகிறார்கள். கடந்த ஐபில் போட்டியில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், திண்டா, உன்முக்த் சந்த், மனோஜ் திவாரி, மனன் வோரா உட்பட சில தெரிந்த வீரர்களும் விளையாட இருக்கின்றனர்.
'தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் இருந்து 80 வீரர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் 24 வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஒவ்வொரு அணியிலும் மூன்று வெளிமாநில வீரர்கள் இடம்பிடிப்பார்கள்’ என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்