தமிழகத்தில் இன்று 12 வயதுக்குட்பட்ட 8 குழந்தை, சிறுவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுதொடர்பான தகவல்களை தமிழக சுகாதாரத்துறை நாள் தோறும் மாலை 7 மணியளவில் அறிவித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 104 பேர் கொரானாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றுவரை 12 வயதுக்குட்பட்ட 121 குழந்தை, சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில் இன்று மேலும் 8 குழந்தை, சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2 வயது பெண் குழந்தையும் ஒருவர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 2162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, 13 - 60 வயதுக்குட்பட்டோருக்குதான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த வயதில் மட்டும் 1788 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், 60 வயதிற்கு மேல் 245 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!