தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணி இன்னும் கைவிடப்படவில்லை என்றும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தடை உத்தரவை அடுத்து, சுற்றுச்சூழல் அனுமதிக்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளோம். இதுகுறித்து தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் நியூட்ரினோ திட்ட அதிகாரி விவேக் தாடர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நெட்டிசன்கள் பலர் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தமிழகத்தில், நியூட்ரினோ திட்டம் வெற்றியடையவில்லை. எங்களை போலவே ஆந்திரமக்களும் போராடினால் அவர்களுக்கும் வெற்றி கிட்டும் என பரப்பி வருகின்றனர். நியூட்ரினோ திட்ட அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்தும், மக்கள் இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்தது. சுமார் ரூ.1,500 கோடி செல்வில் 1,300 மீட்டர் ஆழத்தில் குகை அமைக்கப்பட்டு அதில் ஆய்வகங்கள் அமைப்பது தான் இத்திட்டம். இதையடுத்து, நியூட்ரினோ மையத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக் கோரியும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய சுற்றுச்சூல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததது. இந்த நிலையில் மீண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக நியூட்ரினோ திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!