திருவள்ளூரில் அதிகாலை முதலே இடியுடன் மழை பெய்து வரும் நிலையில் வைக்கோல் போரை மூடச் சென்ற விவசாயி இடி தாக்கி உயிரிழந்தார்.
இன்று அதிகாலை முதலே திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான புழல், மாதவரம், மணலி, செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதில், மாதர்பாக்கம் அடுத்துள்ள நேமலூர் பகுதியில் சந்திரன் என்ற விவசாயி, மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போரை மூடுவதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில், இடி தாக்கியதில் விவசாயி சந்திரன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பாதிரிவேடு காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!