சென்னையில் இன்று மட்டும் 55 பேருக்கு கொரோனா : எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை ?

சென்னையில் இன்று மட்டும் 55 பேருக்கு கொரோனா : எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை ?
சென்னையில் இன்று மட்டும் 55 பேருக்கு கொரோனா : எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை ?

சென்னையில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கும், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 76 பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்கள் நாள்தோறும் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. இன்று வெளியிடப்பட்ட தகவலில் தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் மட்டும் புதிதாக 55 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இன்று மட்டும் தென்காசியில் 5 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூரில் தலா 3 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கையில் மாவட்ட ரீதியாக சென்னை - 358, கோவை - 134, திருப்பூர் - 109, திண்டுக்கல் - 76, ஈரோடு - 70, நெல்லை - 62, செங்கல்பட்டு - 56, நாமக்கல் - 51, திருச்சி - 50, தஞ்சை - 49, திருவள்ளூர் - 48, மதுரை - 46, நாகை - 44, தேனி - 43, கரூர் - 42, விழுப்புரம் - 40, ராணிப்பேட்டை - 39, தென்காசி - 31, திருவாரூர் - 28, தூத்துக்குடி - 27, கடலூர் - 26, சேலம் - 24, வேலூர் - 22, விருதுநகர் - 19, திருப்பத்தூர் - 17, கன்னியாகுமரி - 16, சிவகங்கை - 12, திருவண்ணாமலை - 12, ராமநாதபுரம் - 11, காஞ்சிபுரம் - 10, நீலகிரி - 9, கள்ளக்குறிச்சி - 5, பெரம்பலூர் - 5, அரியலூர் - 4, புதுக்கோட்டை - 1 என உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com