மதுரையில் சீன மருத்துவர் லீ பென்லியாங்கின் உருவப்படத்தை சாலையில் வரைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சாலையில் ஓவியங்கள் வரைந்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.,, அதனடிப்படையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஏற்பாட்டில் அவனியாபுரம் பிரதான சாலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டிருக்கிறது.
அதில் முதன்முதலில் கொரோனா வைரஸ் நோயை கண்டுபிடித்து, அதன் பாதிப்பால் மரணம் அடைந்த லீ வென்லியாங் என்ற சீன மருத்துவரின் புகைப்படம், விழிப்புணர்வுக்காக வரையப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் நோயினை கண்டுபிடித்து, அதன் பாதிப்பு குறித்தும் சீனா அரசுக்கு எச்சரிக்கை செய்தவர் என்ற வகையில் இந்த புகைப்படம் வரையப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த விடா முயற்சியுடன் பணியாற்றி இறுதியில் உயிரிழந்த அவரின் தியாகத்தையும், கடமையும் போற்றி கௌரவிக்கும் வகையில் அவரது ஓவியம் வரைய பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஓவியம் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்