தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பில்லை என தெற்கு ரயில்வே சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகள் என அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஊரடங்கிற்குப் பின்னரும் அது தொடர்கிறது.
ஏழைகளுக்கு மட்டுமே இலவச கொரோனா பரிசோதனை : உச்சநீதிமன்றம்
இதனிடையே ஏப்ரல் 15 முதல் ரயில்கள் இயக்கப்படலாம் என்ற நோக்கில் பயணிகள் பெரும்பாலானோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீடிக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பில்லை என தெற்கு ரயில்வே சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் தெரிகிறது.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்