இது தொடர்பாக, வட சென்னையை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் சிவா, அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “கொரானா அச்சத்தால் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அன்றாட தேவைகளுக்கு வடசென்னை மாவட்டம் இளைஞரணி சார்பாக 1000 குடும்பங்களுக்கும் பால் பாக்கெட் வழங்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார். இப்பதிவுடன் சில புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.