கொரோனா தற்காப்பு நடவடிக்கையாக எண்டப்புளி கிராம மக்கள் மஞ்சள் கலந்த நீரை வீட்டு வாசல் மற்றும் தெருக்களில் தெளித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது எண்டப்புளி ஊராட்சி. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அக்கிராம மக்கள் ஒன்று கூடி அவர்களும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எண்டப்புளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வீடுகளில் காலையிலும் மாலையிலும் வேப்ப இலைகளை அரைத்து அத்துடன் மஞ்சள் கலந்த நீரை வீட்டு வாசல் மற்றும் தெருக்களில் தெளித்து வருகின்றனர்.
வீடுகளின் வாசலில் வேப்ப இலைகளை சொருகி வைத்தும் கொரோனா தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் இயற்கையில் நோய் தொற்று பரவலை தடுக்கும் சக்தி வேப்ப இலைக்கும் மஞ்சளுக்கும் உண்டு. அதனால் வேப்ப இலை, மஞ்சள் கலந்த கரைசலை வீடுகளில் தெளிக்கிறோம். குழந்தைகளை இந்தக் கரைசலை கொண்டு குளிக்க வைத்தும், அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்று வீட்டிற்கு வரும் நபர்கள் இந்த கரைசலில் குளித்த பின்பே தங்கள் வீடுகளுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த முறையை தங்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் கடைபிடித்து வருவதாக எண்டப்புளி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பழங்கள் : வீட்டிற்கே சென்று வழங்கிய மாவட்ட நிர்வாகம்
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!