(கோப்புப் புகைப்படம்)
கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை வீட்டிற்கே சென்று பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 21-ஆம் தேதி விமானம் மூலம் துபாயில் இருந்து மதுரை வந்துள்ளார். இதையடுத்து மதுரை சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு முகாமில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார்.
தமிழகம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு - களத்தில் 7,500 தீயணைப்பு வீரர்கள்
இந்நிலையில், அவர் திடீரென முகாமில் இருந்து நேற்று அதிகாலை தப்பி ஓடியதாக அவனியாபுரம் காவல்நிலையத்தில் மதுரை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் முத்துராஜ் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது காதலி வீட்டிற்கு சென்றிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
மாணவர்களுக்கு வீடு தேடி வரும் மதிய உணவு - மாநில அரசுகளின் உத்தரவு
அப்போது தப்பித்துச் சென்ற இளைஞர் காதலி வீட்டில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை பிடித்த போலீசார் கைது செய்தனர். அப்போது வெளிநாட்டிலிருந்து வந்த தன்னை காண காதலி ஆவலாக இருந்ததாக அந்த இளைஞர் தெரிவித்தார். பின்னர், காதலி வீடு சிவகங்கை மாவட்டத்தில் வருவதால் அவரை கண்காணிக்க அந்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!