போயஸ் கார்டன் இல்லம் எங்களுக்கே சொந்தம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு இன்று வந்தார். சகோதரர் தீபக்கின் அழைப்பின் பேரிலேயே அங்கு வந்ததாகவும், ஆனால் தினகரன் ஆதரவாளர்கள் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்றும் தீபா குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக புதியதலைமுறையிடம் தொலைபேசி வாயிலாக பேசிய தீபக், போயஸ் கார்டன் இல்லம் எனக்கும், தீபாவுக்குமே சொந்தம் என்று தெரிவித்தார். போயஸ்கார்டன் இல்லத்துக்கு வந்த தீபாவை யாரும் தடுக்கவில்லை என்று கூறிய தீபக், அவரை போயஸ் இல்லத்துக்கு வருமாறு நான்தான் அழைத்தேன் என்றும் கூறினார். போயஸ் இல்லம் வந்த தீபா, ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்தியதாகவும் தீபக் தெரிவித்தார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!