ஈரோடு ஏன் முடக்கப்பட்டது என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்
தமிழகத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளா மற்றும் மகாராஷ்ட்டிராவில் 10 மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மூன்று மாவட்டங்களிலும் அத்தியாவசியத் தேவை தவிர அனைத்தையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#Update: Many questions asked why Erode is under lockdown, two Thai nationals who were already reported positive are undergoing treatment at Perundurai Medical College. Hope that gives clarity. ( these are NOT new cases). @MoHFW_INDIA #Vijayabaskar #Social_Distancing #TNGovt — Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 22, 2020
இதனிடையே ஈரோடு ஏன் முடக்கப்பட்டது என பலரும் இணையதளங்களில் கேள்வி எழுப்பினர். அங்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்றும் சந்தேகம் கிளப்பினர். இதற்கு விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர், தாய்லாந்தைச் சேர்ந்த இருவர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!