ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று உணவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்கள் எந்த ரேசன் கடையிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் உள்மாநில பெயர்வு திறன் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது என்றார்.
அம்மாவட்ட மக்களிடையே இந்த திட்டம் வரவேற்பை பெற்றதையடுத்து, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அறிவித்தார். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பொது விநியோகத்திட்ட நியாய விலைக்கடைகளில் தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
மின்னணு குடும்ப அட்டைகள் இல்லாத குடும்ப அட்டைத்தாரர்கள், தங்களின் ஆதார் அட்டை மற்றும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் கொண்டு ஒருமுறை கடவு சொல் (OTP) உதவியுடன் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பொது விநியோகத்திட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறினார். ஒரு நியாய விலைக்கடையில் அரிசி பெற்ற குடும்ப அட்டைத்தாரர்கள், அடுத்த நியாய விலைக்கடையில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பிற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!